விஜய் தொலைக்காட்சிகளில் பல சூப்பர் ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒளிபரப்பான தொடர் மௌன ராகம். மாதம் தொடர் பெங்காலி சீரியலை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் இசை, குடும்பம் கதையை பின்னணியாகக் கொண்ட தொடர். இந்த தொடர் முதல் பாகம் முடிந்து இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த தொடரில் முதல் பாகத்தில் கிருத்திகா, சபிதா, ராஜீவ் மற்றும் சிப்பி ரஞ்சித் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இந்த தொடரில் தாய் செல்வம் என்பவர் இயக்கியுள்ளார். இந்த தொடருக்கு பிரபல இசையமைப்பாளர் எம். ஜெயச்சந்திரன் பின்னணி இசை அமைத்து உள்ளார். அழகிய குரல் வளமும் மனமும் கொண்டவள் சக்தி. இவள் 7 வயது சிறுமி. அவரது அம்மா மற்றும் தாய்மாமனின் பாதுகாப்பில் வளர்ந்து வருகிறார். தன் தந்தை பாதுகாப்பில் என்று தெரியாமல் இருப்பதால் பல அ வ மா னங்கள் ஏற்படுகிறது.
தன் தந்தையை காண சென்னைக்கு வருகிறார். இறுதியில் சக்தி தன் தந்தை, தாய் உடன் சேர்ந்து வாழ்கிறாரா? கார்த்தி மல்லிகா உடன் வாழ்கிறாரா? காதம்பரி உடன் வாழ்கிறாரா? என பல திருப்பங்கள் நிறைந்ததாக இந்த தொடர் உள்ளது. இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இத்தொடரில் சக்திக்கு அம்மாவாக மல்லிகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சிப்பி இரஞ்சித். இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். சிப்பி ரஞ்சித் அவர்கள் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
1995 ஆம் ஆண்டு வெளியான தலஸ்ட்னானம் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ள இவர் இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரை உலகில் நடிகரான கேப்டன் விஜயகாந்த் நடித்த ‘தர்மா’ படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.