தமிழ் சினிமாவில் 90-களில் டாப் நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை தேவயானி. முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து பிரபலமான தேவயானி, இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து குடும்பத்தை எ தி ர் த்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின் படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்து இரு பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார் தேவயானி. அவரது மகள் இனியா சமீபத்தில் தான் 12 ஆம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேர்ந்துள்ளார்.
இந்நிலையில், இயக்குனர் ராஜகுமாரன் தற்போது அளித்த பேட்டியொன்றில் தன்னுடைய இரண்டாம் மகள் இனியாவை விரைவில் சினிமாவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் உடன் தான் இணைந்து நடிக்க வைக்க போவதாகவும் கூறி தன்னுடைய ஆசையைக் கூறியிருக்கிறார். தேவயானி மற்றும் பார்த்திபன் நடித்த ’நீ வருவாய் என’ படத்தில் முதலில் அஜித்தும் விஜய்யும் தான் இணைந்து நடிக்கவிருந்தது.
ஆனால் விஜய் ந டிக்கா மல் போக பார்த்திபனுடன் அஜித் நடித்து கொடுத்தார். இந்நிலையில் முதல் பாகத்தில் விஜய் நடிக்கவி ல் லை என்பதால் ’நீ வருவாய் என’ படத்தின் இரண்டாம் பாகத்தில் அவரது மகனையாவது நடிக்க வைக்க வேண்டும் என்றும் விஜய்யிடம் நேரடியாக கேட்கப் போவதாகவும் கூறியிருக்கிறார் இயக்குனர் ராஜகுமாரன்.
தற்போது ’நீ வருவாய் என’ 2 படத்திற்கான ஸ்கிரிப்ட் ரெடியாகி விட்டதாகவும் 10 பேரிடம் கதையைக் கூறி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் விஜய் மகன் ஒரு கேரக்டரிலும் மற்றொரு கேரக்டரில் இயக்குனர் விக்ரமனின் மகன் கனிஷ்கா விக்ரமன் என்றும் உறுதியாக சொல்லியுள்ளார். ஆனால் ஜேசன் சஞ்சய் விசயத்தில் தான் முடிவெடுப்பதி ல் லை என்றும் அவர் விருப்பம் என்னவோ அதை செய்யட்டும் என்றும் விஜய் பேட்டியில் கூறியிருந்தார்.
அப்படி விஜய் ஓ கே கூறினாலும் ஜேசன் சஞ்சய், தற்போது இயக்குவதில் அதிக க வ னம் செலுத்தி வருவதால் நடிக்க எப்படி ஒத்துக் கொள்வார். காலப்போக்கில் அது நடந்தால் ராஜகுமாரனின் ஆ சையும் நிறைவேறும் குட்டி தளபதியும் உருவாகுவார் என்றும் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.