நடிகை ஊர்வசி முதன் முதலாக தனது மகளுடன் வெளியிட்டுள்ள பு கைப்படம் அதிக அளவில் வை ர லாகி வருகின்றது. குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்து, பின்பு தமிழில் கே.பாக்யராஜ் இயக்கத்தில் உருவான முந்தானை முடிச்சு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானாவர் தான் நடிகை ஊர்வசி.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அபூர்வ சகோதரிகள், கொம்பேறி மூக்கன், நெருப்புக்குள் ஈரம், ஓ மானே மானே, அம்பிகை நேரில் வந்தாள், அன்பே ஓடிவா என அடுத்தடுத்து படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். 90களில் முன்னணி நாயகியாக வலம் வந்த இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
திரையுலகில் பிரபலமாக இருந்த இவர் 2000ம் ஆண்டு நடிகர் மனோஜ் கே.ஜெயன் என்பவரைத் திருமணம் செய்தார். ஊர்வசிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளார். பின்பு இருவருக்குள்ளும் கருத்து வே றுபாடு ஏற்பட்டு 2008ம் ஆண்டு வி வா கர த் து பெற்று பிரிந்து விட்டார். அதன் பின்பு சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான சிவபிரசாத்தை மறுமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு 46 வயதில் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். தற்போது இரண்டாவது கணவர் மற்றும் மகன், மகளுடன் பு கைப்படம் வெளியிட்டுள்ளார். இந்த பு கைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அடுத்த ஹீரோயின் தயாராகி விட்டதாக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.