சினிமாவில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகள் அல்லது மற்ற துறையில் இருப்பவர்கள் கடந்த சில ஆண்டுகளாக திருமணம் செய்து கொண்டு அதனை இணைய தளத்தில் பு கைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள். இந்த வகையில் சமீபத்தில் வளர்ந்து வரும் நடிகர் மற்றும் நடிகை இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். அவர்கள் தான் நடிகர் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் என்பவர்.
இவர்கள் இருவரும் நீண்ட காலங்களாக காதலித்து வந்துள்ளார்கள். அதன் அடிப்படையில் இவர்கள் இருவீட்டார் சம்மதத்துடன் செப்டம்பர் 13ஆம் தேதி சொந்த ஊரில் தங்களது திருமணத்தை முடித்துள்ளார்கள். அவர்கள் திருமணத்திற்குப் பிறகு கீர்த்தி பாண்டியனிடம் நடிப்பீர்களா என்று கேட்டதற்கு குடும்பம் வேறு, தொழில் வேறு என்று கூறிவிட்டு நான் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இருவருமே திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் அதிகமான ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் சபாநாயகன். அதனைத் தொடர்ந்து அவரது மனைவி கீர்த்தி நடித்த படம் தான் கண்ணகி. இந்த இரண்டு திரைப்படமுமே டிசம்பர் 15ஆம் தேதி ஒரே நாளில் திரையரங்கில் வெளியாக இருக்கிறது.
இதன் அடிப்படையில் திருமணம் ஆகி ஒரு சில மாதத்திற்குள் இருவரும் இப்படி ஒரு விஷயத்தில் போட்டி போட்டுக் கொள்கிறார்கள். அதன் அடிப்படையில் விடையும் கேட்ட பொழுது குடும்பம் வேறு சினிமா வேறு என்று தெரிவித்துள்ளார்கள்.