மனோரமாவின் இயற்பெயர் கோபிசாந்தா. மனோரமா தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் தனது திறனை வெளிப்படுத்திய இவர் 1500 திரைப்படங்களுக்கு மேல் நடித்தார். இவர் தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் ‘ஆச்சி’ என அன்போடு அழைக்கப்பட்டார். இவர் தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். கா. ந. அண்ணாதுரை, மு. கருணாநிதி ஆகிய இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன்நடித்து உள்ளார்கள்.
தவிர ம. கோ. இராமச்சந்திரன் மற்றும் செ. செயலலிதா இவருடன் தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும் என். டி. ராமராவ் தெலுங்கு படங்களில் இவருடன் நடித்திருக்கிறார். இவர் 1958 இல் தமிழ் படத்தில் ஒரு கதாநாயகி பங்கு கொண்ட வெள்ளி திரையில் நாடகங்களிலிருந்து இடம்பெயர்ந்தது மாலையிட்ட மங்கை கவிஞர் கண்ணதாசன் அவரது இந்த படத்தில் நகைச்சுவையாக நடிக்க வேண்டும் கொடுத்தார்.
அவர் கதாநாயகியாக நடித்த முதல் படம் 1963 கொஞ்சும் குமரி. பின்னர், அவர் 1960 முதல் நகைச்சுவை விஷயத்தில் அதிக கவனம் செலுத்தினார். 50 படங்களில் நன்கு அறியப்பட்ட நகைச்சுவை நடிகர் நாகேஷுடன் அவருக்கு சமமான சவாலான பாத்திரங்கள் வழங்கப்பட்டன. மனோரமா தனது 78 ஆவது அகவையில் 2015 அக்டோபர் 10 அன்று இரவு 11:00 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.
மனோரமா 1964 ஆம் ஆண்டில் தனது நாடகக் கம்பெனியைச் சேர்ந்த எஸ். எம். ராமநாதன் என்பவரைக் காதலித்துத் திருமணம் புரிந்தார். 1966 ஆம் ஆண்டில் இராமநாதனுடன் மணமுறிப்புப் பெற்று, சென்னையில் தனியாக வாழ்ந்து வந்தார்.இவர்களுக்கு பூபதி என்னும் மகன் பிறந்தார். ஆச்சி மனோரமாவுக்கு ஒரு பேதி உள்ளாராம். இவரது பேத்தியின் புகைப்படம் இணையத்தில் செம வைரலாக பரவி வருகிறது. இவரது பேத்தி சினிமா நடிகைகள் போல் செம அழகாக உள்ளார். இதோ அவரது பேத்தியின் புகைப்படத்தை நீங்கள் பாருங்க.