விஜய் தொலைக்காட்சியில் தொடர்ந்து 3 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு பிரபலமான தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில் இதுவரை சில நடிகர்களின் மாற்றம் மட்டுமே நடந்தது. அதில் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு கதாபாத்திர மாற்றம் தான் முல்லை வேடம்.
முதலில் வி ஜே சித்ரா தான் நடித்திருந்தார். ஆனால் அவர் தற்கொலை செய்து இ ற ந் த பிறகு அந்த கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் காவ்யா என்பவர் நடிக்க அவரின் நடிப்பு பிடித்துப் போக இப்போது தான் மக்களால் முல்லையாக ஏற்றுக் கொள்ளப் பட்டார்.
ஆனால் அதற்குள் இப்போது முல்லையாக நடித்து வந்த காவ்யா தொடரில் இருந்து விலகி விட்டார்.
தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அடுத்த முல்லையாக நடிக்கப்போவது அபிநயா என கூறுகின்றனர்.
இவர் இதற்கு முன் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சித்ராவின் தோழியாக ஒரு சீனில் வந்து போவார். தற்போது இவரே சித்ராவாக நடிக்கப் போவதாக கூறப்படுகிறது.