திரையுலகில் முன்னணி நடிகையாக திகழும் நயன்தாராவுக்கு குழந்தை பெறுவதற்காக சினிமாவை விட்டு விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான நானும் ரவுடி தான் என்ற திரைப்படம் மூலம் காதலிக்க ஆரம்பித்த நயன் விக்கி கடந்த ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் தற்போது ஸ்பெயின் நாட்டில் இருக்கும் நடிகை நயன்தாரா இவரின் கைவசம் இருக்கும் திரைப்படங்களை முடித்துவிட்டு திரையுலகை விட்டு விலகப்போவதாக தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் இவர்கள் இருவரும் நாடு திரும்பி குழந்தை பெறுவதற்கான வேலை பாடுகளை ஆரம்பிப்பதாக தெரிவித்துள்ளனர்.
நயனுக்கு தற்போது 40 வயதாகிறதால் குழந்தைக்காக தற்போது சிகிச்சை மேற்கொள்ள போகிறாராம். மேலும் புதிய படவாய்ப்பை தவிர்த்தும் வருகிறாராம். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.