தமிழ் சினிமாவில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இயக்குனர் மணிரத்னம் இயக்கி இருந்த இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், கார்த்தி, ஜெயம் ரவி போனற பல நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.
லைகா நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். முதல் ஷோவில் இருந்து சிறந்த வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்று வரும் இந்த படம் வசூலில் ச க்க ப்போ டு போட்டு வருகிறது. இந்த படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரம் தான் ஐஸ்வர்யா ராய் நடித்த நந்தினி.
மேலும் இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் மணிரத்னம் தேர்ந்தெடுத்தது நடிகை அனுஷ்கா தானாம். 2011ஆம் ஆண்டு பொன்னியின் செல்வன் துவங்கிய போது நந்தினி கதாபாத்திரத்தில் நடிகை அனுஷ்காவை நடிக்க வைக்க மணிரத்னம் முடிவெடுத்துள்ளார். ஆனால், அதன் பின் அந்தா படம் ட்ராப் ஆகி விட்டது. நடிகை அனுஷ்கா தற்போது பட வாய்ப்புகள் இ ல்லா மல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.