பொதுவாக சினிமாவில் ஏதாவது ஒரு துறையில் வளம் வர ஆசைப்படுபவர்கள் பலர் உண்டு. ஆனால் அனைவருக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. அந்த வகையில் பிரபல விஜய் டிவி பல திறமைசாலிகளை ஊக்குவித்து வருகிறது. விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் நடைபெற்று வருகின்றன. அதில் கலக்கப் போவது யாரு மற்றும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகள் பாடகர்களையும், நகைச்சுவை கலைஞர்களையும், ஏன் ஹீரோக்களையும் கூட உருவாக்கி வருகிறது.
அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரபலமானவர் தான் பூவையர். இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல கானா பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம் பிடித்தார். பாடல்களை பாடுவது மட்டுமில்லாது அந்த நிகழ்ச்சியில் இவர் செய்யும் ஜாலியானய விஷயங்களும் மக்கள் மனதை கவர்ந்தது. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த பூவையர் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டார்.
இதனால் இவரை வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. இவர் பிகில் படத்தில் ஒரு பாடலை பாடி நடனமாடவும் செய்தார். அதே போல மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் நடித்து இன்னும் அதிக அளவில் மக்களிடையே பிரபலமானார். அது மட்டுமல்லாமல் மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வரும் இவர் திரைப்படம் மற்றும் நிகழ்ச்சிகள் என எப்போதும் பிசியாக இருந்து வருகிறார். இவ்வாறு இந்த சிறு வயதிலேயே அடுத்த அடுத்த லெவலுக்கு சென்று கொண்டிருக்கிறார் பூவையர்.
அந்த வகையில் இவர் தனது 14 வயதிலேயே புதிய கார் ஒன்று வாங்கியுள்ளார். இந்த சிறு வயதிலேயே பலருக்கும் முன் மாதிரியாக இருக்கும் இவரை பலரும் பாராட்டி வருகின்றனர். ஏழை சிறுவனாக இருந்தாலும் தனது திறமையால் சிறு வயதிலேயே சாதித்து வரும் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போஸ்டை பதிவிட்டிருக்கிறார்.
மேலும் தனது கேப்ஷனில், “மக்களே எங்களோட புதிய கார். நீங்கள் இல்லயே நான் இல்லை. உங்களுடைய ஆசிர்வாதம் எனக்கு எப்போதுமே இருக்கணும். அனைவருக்கும் நன்றி. இறைவனுக்கும் நன்றி. எல்லா புகழும் ஆண்டவனுக்கு” எனக் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram