பிரபல முன்னணி இயக்குனரும் தனுஷின் அண்ணனுமான இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு கார்த்தி வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் கலை இயக்குனராக பணிபுரிந்தவர் தான் சந்தானம். அவருக்கு வயது 50 என தெரிகிறது. இவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் சர்க்கார் படத்தி ப்ரொடக்ஷன் டிசைனராகவும் பணிபுரிந்துள்ளார்.
தளபதி விஜய்யின் சர்கார், ரஜினியின் தர்பார் ஜகமே தந்திரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் கலை இயக்குனராகப் பணியாற்றிய சந்தானம் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இந்நிலையில் மாரடைப்பால் சந்தானம் மரணமடைந்ததாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருடைய மறைவையடுத்து திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.