நடிகை சரண்யா பொன்வன்னன் மணிரத்தினம் இயக்கிய நாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து தனது சினிமா பயணத்தை தொடங்கியவர். அதன் பிறகு இவர் ஹீரோயினாவும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் பல படங்களில் நடித்து பேரையும், புகழையும் சம்பாதித்தார். அதுவும் அம்மா வேடத்தில் நடிக்கும் இவரின் நடிப்பு அனைவருக்கும் மிகவும் பிரசித்தி என்றே சொல்ல வேண்டும். அதன் பிறகு வாய்ப்புகள் ஏராளமாக குவிந்தன.
குறிப்பாக இவர் நடித்த ராம், தவமாய் தவமிருந்து, முத்துக்கு முத்தாக, களவாணி, எம் மகன், வேல், ஒரு கல் ஒரு கண்ணாடி என வரிசையாக சொல்லிக் கொண்டே போகலாம். தொடர்ந்து வெற்றியை ருசித்து இப்படி ஓடிக் கொண்டிருக்கும் இவருக்கு இப்பொழுதும் டாப் ஹீரோவின் படங்களில் அம்மா சித்தி போன்ற கதாபாத்திரங்களில் நடித்து இன்றும் ஓடிக் கொண்டிருக்கிறார்.
இதனால் அவரது மார்க்கெட்டும் இன்று வரை கு றை யாமல் இருக்கிறதுஎன்றே சொல்ல வேண்டும். இப்படி ஓடிக் கொண்டிருக்கும் இவர், ச மீ பத்திய பேட்டி ஒன்றில் இவர் நடிகர் அஜித் குறித்து பேசி உள்ளார். அந்த பெட்டியில் அவர் கூறியது என்னவென்றால் முதல் முறையாக அஜித்துடன் இணைந்து கிரீடம் திரைப்படத்தில் நான் நடிக்கும் போது எனக்கு மிகவும் ப ய மாக இருந்தது. காரணம் என்னவென்றால் அஜீத் ஆள் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார்.
அதனால் அவர் கெ த்து காட்டுவார். அவர் வைப்பது தான் ச ட்டம் என நினைத்தேன். ஆனால் படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற பிறகு தான் தெரிகிறது. அஜித் எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் சகஜமாக பழகக் கூடியவர் என்றும், குழந்தை மாதிரி என்று அப்பொழுதுதான் எனக்கு புரிந்தது. அது மட்டுமில்லாமல் தான் நடிக்கும் படத்தில் அதிகமாகவும், அழகாகவும் காட்ட வேண்டும் என நினைக்க மாட்டார். நம்ம ஊரில் ஒரு வெள்ளைக்கார நடிகன் என்றால் அது அஜித் தான்.
ஒரு காட்சியில் அஜித் பேச வேண்டிய வசனங்கள் மற்றவர்கள் பேசினால் சிறப்பாக இருக்கும் என அவர் நினைத்து விட்டால் உடனே கொடுத்து அதை அழகு பார்க்கக் கூடியவர். மற்ற நடிகர்கள் இது போல் செய்ய மாட்டார்கள். தன் படங்களில் தான் தான் ஸ்கோர் செய்ய வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் அஜித் இதிலிருந்து மு ற் றிலும் மா று பட்டவர். அந்த விஷயத்தைப் பொறுத்த வரை அஜித்தை நான் ரசித்துப் பார்ப்பேன். அவர் ஒரு தலை சிறந்த மனிதர் என கூறினார்.