கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான படம் கயல் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆனந்தி. இப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானதால் ‘கயல்’ ஆனந்தி என அழைக்கப்பட்டார்.ஆந்திராவை பூர்விகமாகக்கொண்ட இவர் தமிழில் நாயகியாக அறிமுகமாவதற்கு முன்னதாகவே தெலுங்கில் பல படங்களில் நாயகியாக நடித்திருந்தார்.
தனது குழந்தைத்தனமான முகபாவனை மற்றும் நடிப்பால் ரசிகர் மனதில் நிலையான ஒரு இடத்தைப் பெற்றார்.இதையடுத்து, ஜனவரி மாதம் சாக்ரடீஸ் என்ற துணை இயக்குனரை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர் ‘மூடர்கூடம்’ படத்தின் இயக்குனர் நவீனுக்கு நெருங்கிய உறவினராவார்.
இந்நிலையில், தற்போது கயல் ஆனந்தி 7 மாத கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்யாணம் ஆகி 8 மாசம் தான் ஆகுது அதுகுள்ள இப்படியா? என் ரசிகர்கள் கேள்வியை எழுப்பி வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.