தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் வந்தாலும் பலருக்கு ஒரு சில படங்களை எப்போதும் மறக்க முடியாது. அந்த வகையில் 90களில் இருந்தவர்களுக்கு அப்போது வந்த பல படங்களில் ஒரு சில படங்களை இப்போதும் ரசித்து பார்ப்பார்கள். அப்படி இருக்கும் பல படங்களில் ஒரு படம் தான் 1999ம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான வாலி திரைப்படம்.
அஜித், சிம்ரன், ஜோதிகா, விவேக் என பலர் நடிக்க வெளியான இப்படத்தில் தேவா இசையில் வந்த அனைத்து பாடல்களுமே செம ஹிட். இப்படத்தின் பாடல்கள் இன்று வரை அனைவரும் முணுமுணுக்கும் பாடல்களாகவே உள்ளன. ஜோதிகாவுக்கு இப்படம் அறிமுகப் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய முதல் படமே அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரிது தந்தது.
அவ்வளவு வரவேற்பை பெற்ற இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு அடையாறு போட்கிளவுஸில் இருக்கும் ஒரு வீட்டில் நடத்த படக்குழுவினரால் திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த வீட்டு ஓனரின் விருந்தாளிகள் வருவதால் வீடு தர முடியாது என வீட்டு ஓனர் ம று த் துள்ளார். இந்த சூழ்நிலையில் எஸ்.ஜே. சூர்யா வீட்டு ஓனரிடம் என்னோட முதல் படம் சார்.
அது மட்டுமில்லாமல் முதல் நாளே படப்பிடிப்பு நடக்கவி ல் லை என்றால் சென்டிமென்ட்டாக படத்தையே நி று த் தி விடுவார்கள் என எவ்வளவு கேட்டும் ஓனர் ம று த் து ள்ளார். அதன் பின்னர் ஓ.கே சார், நீங்கள் வீடு தர வே ண் டாம், ஆனால் நாளை காலையில் ஜன்னல் வழியே பாருங்கள். வெளியில் உள்ள மரத்தில் நான் பி ண மா கத் தான் தொ ங் குவேன் என்று சொல்லி பிறகு ஓ னரை சம்மதிக்க வைத்துள்ளாராம் எஸ்.ஜே.சூர்யா. இந்த சம்பவத்தை அவர் ஒருமுறை கூறியிருந்தார்.