சினிமாவில் பல நடிகைகள் ஒரு சில காலங்கள் வரை நடித்து விட்டு சில காரணங்களால் சினிமாவை விட்டு விலகி விடுவார்கள். அதற்கு காரணம் மார்க்கெட் இல்லை என்றும் திருமணமாகிய காரணத்தாலும் தான். அப்படி தமிழில் பொய் சொல்ல போரோம் என்ற படத்தின் அறிமுக நடிகையாக களமிரங்கியவர் நடிகை பியா பாஞ்பேய். இதையடுத்து நடிகர் அஜித்தின் ஏகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு பிறகு கோ, கோவா, சட்டம் ஒரு இருட்டு அறை, கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமானார்.
இதையடுத்து தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்து பின் இந்தி பக்கம் சென்று நடித்து வருகிறார். மேலும் இவர் கடைசியாக தமிழில் 2018ல் வெளியான அபியும், அனுவும் படத்தில் நடித்தார். சில காலம் இடைவெளிவிட்ட பியா மீண்டும் இணையம் பக்கம் திரும்பி ஹாட் போட்டோஹுட் நடத்தி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வந்தார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு மொட்டை அடித்து படுத்தபடி தலையணையை பிடித்தவாறு ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்.
இதை பார்த்த ரசிகர்கள் ஏன் இப்படி ஸ்நாப் சேட் எவெஃக்ட்டா என்று கேட்டுள்ளார். அதற்கு பியா பாஞ்பேய், இது ஒரு படத்தின் கெட்டப்பிற்காக மொட்டையடித்தேன் என்று கூறியுள்ளார். அப்படம் தமிழ், மலையாளம் என இரு மொழிப் படமாக ரீமேக்காகும் படத்திற்கானது என்று கூறி வருகிறார்கள்.