பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் ஹ்ரித்திக் ரோஷன். 1980 களில் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகத் தோன்றியதற்குப் பிறகு, கஹோ நா… பியார் ஹே என்னும் திரைப்படத்தில் ஹிரித்திக் அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார். இத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதுடன் இதில் ரோஷனின் நடிப்பு அவருக்கு சிறந்த நடிகர் மற்றும் சிறந்த அறிமுக ஆண் நடிகர் ஆகிய ஃபிலிம்ஃபேர் விருதுகளையும் பெற்றுத்தந்தது. இவர் சுசனே கான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட க ரு த்து வே று பாடு காரணமாக இருவரும் 2014 -ம் ஆண்டு வி வா க ர த் து பெற்றனர்.
இதன் பின் இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். ஹ்ரித்திக் ரோஷன் தற்போது சபா அசாத் என்பவரை காதலித்து வருகிறார். எந்த ஒரு பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் ஹ்ரித்திக் தனது காதலியையும் அழைத்து செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சுஷானே, அர்ஸ்லன் கொனி என்பவரைக் காதலித்து வருகிறார். இந்த விஷயத்தை இருவரும் வெளிப்படையாக இதனை அறிவித்து விட்டனர். கோவாவில் தனது முன்னாள் மனைவியின் ஹோட்டல் திறப்பு விழாவிற்கு ஹ்ரித்திக் ரோஷன் தனது காதலியுடன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்நிலையில் ஹ்ரித்திக் ரோஷனின் காதலுக்கு அவர்களின் பெற்றோர் சம்மதம் கொடுத்து விட்டதாக தகவல் ஒன்று வெளியாகிவுள்ளது. அதே சமயம் அ வச ரப்ப ட்டு திருமணம் செய்து கொள்ளப் போவதி ல் லை என்று ஹ்ரித்திக் ரோஷன் முடிவு செய்துள்ளார். இவர்களின் கல்யாணம் இந்த வருடம் இ று தியில் நடக்கவுள்ளதாம். ஆனால் திருமணம் மிக பிரம்மாண்டமாக இருக்காது. இருவரின் உறவினர்கள் மற்றும் குடும்பங்களுடன் மிகவும் எளிமையாக நடத்தப்படும் என கூறப்படுகிறது.