விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் நிறைவடைந்தது. இதில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இ று திப் போட்டியில் அசீம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய மூன்று பேர் மட்டுமே தகுதி பெற்று இருந்தார்கள். இதில் அசீம் முதலிடத்தை பிடித்து டைட்டில் வென்றார். அவரைத் தொடர்ந்து விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய இருவரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தையும் பிடித்து இருந்தார்கள். முதல் பட்டத்தை வென்ற அசீமிற்கு 50 லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், அவருக்கு சிறப்பு பரிசாக ஒரு புதிய மாருதி காரும் வழங்கப்பட்டு இருந்தது.
இந்த சீசனில் பல விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தனர். அதில் சரவணன் மீனாட்சி புகழ் ரச்சிதா மகாலட்சுமியும் ஒருவர். ரச்சிதாவிற்கு சீரியல் நடிகர் தினேஷ் என்பவருடன் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆனது. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இப்போது வரை இவர்களுக்கு குழந்தைகள் எதுவும் இ ல் லை. இப்படி ஒரு சூழ்நிலையில் ரச்சிதா தன் கணவரை விட்டு பி ரி ந்து த னியாக வாழ்கிறார் என்று சோசியல் மீடியாவில் தகவல்கள் வெளியாகி இருந்தது.
ஆனால், இது குறித்து பேசிய தினேஷ் என்னை பொறுத்த வரைக்கும் எங்கள் இருவருக்கும் இ டையிலான பி ரி வு என்பது த ற்காலிகமானது தான். மற்றபடி நான், ரச்சிதா ஆகிய இருவரும் சட்ட பூர்வமாக பி ரி வதற்கான எந்த ஒரு முயற்சியையும் இந்த நிமிஷம் வரைக்கும் எடுக்கவி ல் லை என்று கூறி இருந்தார். என்னதான் நாங்கள் இருவரும் தற்போது பி ரி ந்து வாழ்ந்து வந்தாலும் ரச்சிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு இருந்தார் என்பது நமக்குத் தெரிந்ததே.
அதே போல ரச்சிதா பிக் பாஸிற்கு செல்வதற்கு முன்னால் கூட வாழ்த்து தெரிவித்து மெசெஜ் அனுப்பி இருக்கிறார் தினேஷ். ஆனால் அதனைப் பார்த்தும் ரச்சிதா எந்த பதிலும் அனுப்பவி ல் லை என்று பேட்டி ஒன்றில் பேசி இருந்தார் தினேஷ். அப்படி இருந்தும் பிக் பாஸில் விளையாடிவந்த ரச்சிதாவிற்கு க டை சி வரை ஆதரவாக தொடர்ந்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்தார் தினேஷ். ஆனால், தனது கணவர் குறித்து பிக் பாஸில் ஒரு வார்த்தை கூட பே சாமல் இருந்து வந்தார் ரச்சிதா.
பிக் பாஸ் வீட்டில் ஒரு டாஸ்கின் போது அனைவரும் தங்களுக்கு நெ ரு க்கமானவர்களுக்கு கடிதம் ஒன்றினை எழுதி அதை படித்துக் காட்டி கொண்டு இருந்தனர். அதில் ரச்சிதா எனக்கு குழந்தை அமைப்பு இருக்கிறதா என்று கூட எனக்கு தெ ரி யாது. என்னுடைய அம்மா தான் என்னுடைய குழந்தை. அந்த கடவுள் அந்த குழந்தையை எனக்கு க டை சி வரை கொடுக்க வேண்டும். இதற்குப் பின்னர் இனி எனக்கு நீ உனக்கு நான் என்று வாழ்வதற்கு தயாராக இருக்கிறேன் அம்மா’ என்று க ண் ணீ ர் ம ல்க அந்த கடிதத்தைப் படித்திருந்தார்.
அதே போல ஒரு எபிசோடில் விக்ரமனிடன் பேசிய ரச்சிதா, நான் என்னோட 35வது வயதில் தான் ஒரு குழந்தையை தத்து எடுப்பேன் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸுக்கு பின்னர் ஆ த ரவற்றோர் இல்லத்துக்கு சென்ற ரச்சிதா ‘குழந்தை என்றாலே எல்லா பெண்களுக்கும் இருக்கும் ஆசை தான் எனக்கும் இருக்கு, குழந்தைகள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் பெண் குழந்தைகளை பார்த்தாலே நான் வீ ழ் ந்து விடுவேன். குழந்தைகளை எப்படி பார்க்கிறேனோ அதேபோலத்தான் இங்கு இருக்கும் பெரியவர்களையும் நான் பார்க்கிறேன்’ என்று பேசி இருக்கிறார்.