நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பைக் மெக்கானிக்காக இருந்து சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் தான் அஜித். இவர் அடுத்ததாக தனது 62 வது படத்தில் நடிக்கவுள்ளார். இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படம் குறித்த அப்டேட் இந்த மாதத்திற்குள் வெளியாகும் என்று நம்பப்படுகின்றது. அமராவதியில் தொடங்கிய அஜித்தின் தமிழ் திரையுலக பயணம் பல்வேறு ஏற்ற இ ற க்கங்களை கண்டது.
குறிப்பாக நடிகர் அஜித் இதுவரை 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டாலும், அதில் அவருக்கு தோல்வி படங்கள் தான் அதிகம், இருந்தும் அவர் முன்னணி நடிகராக உயர்ந்து நிற்பதற்கு முக்கிய காரணம் அவரது ரசிகர்கள் தான். தமிழ்நாட்டில் அஜித்துக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அவர்களை திருப்திபடுத்தும் வகையிலான கதைகளையே அஜித் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அஜித் குறித்த ஒரு தகவல் க சி ந் துள்ளது.
இப்படி உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித், கடைசியாக கடந்த 2002-ம் ஆண்டு எழில் இயக்கத்தில் வெளியான ராஜா என்கிற திரைப்படத்தில் தான் நகைச்சுவை நடிகர் வடிவேலு உடன் இணைந்து நடித்திருந்தார். அப்படத்தில் இவர்கள் இருவருக்கும் இடையேயான காமெடி காட்சிகள் வேற லெவலில் ஹிட் அ டி த்தன. அதன் பின் இந்த இருவரின் கூட்டணி இன்று வரை சேர்ந்து நடிக்கவி ல் லை. இப்படி 20 ஆண்டுகளாக வடிவேலுவை அஜித் தன் படத்தில் நடிக்க வைக்காததற்கு ராஜா படத்தின் போது இருவருக்கும் இடையே நடந்த மோ த ல் தான் காரணம் என கூறப்படுகிறது.
ராஜா படத்தின் கதைப்படி அஜித்தின் மாமாவாக நடித்திருப்பார் வடிவேலு. அந்தப் படத்தில் அந்த கேரக்டருக்கு ஏற்ப அவர் அஜித்தை அப்படம் முழுக்க வாடா போடா என்று தான் அழைப்பார். ஷூட்டிங் முடிந்த பின்னும் கூட அதே பாணியில் வாடா போடா என வடிவேலு அழைத்தது அஜித்துக்கு சுத்தமாக பிடிக்கவி ல் லையாம். அஜித் கொஞ்சம் கௌரவமான ஆள் என்பதால் இயக்குனர் எழிலிடன் இப்படி பேச வேண்டாம் என்று கூறியிருக்கிறார். இயக்குநரும் இந்த விஷயத்தினை வடிவேலுவிடம் கூற, அவர் இதற்கெல்லாம் செவி சாய்க்காமல் மீண்டும் அஜித்தை அவ்வாறே அழைத்து வந்திருக்கிறார்.
இதே கவுண்டமணி ரஜினியை அப்படி கூப்பிட்டது பி ர ச் ச னையாச்சா என்று கூறியிருக்கிறார் வடிவேலு. இதையடுத்து அப்படத்தின் ஷூட்டிங் முடியும் வரை வடிவேலு உடன் பேச்சைக் கு றை த்துக் கொண்ட அஜித், இனி உன் சவகாசமே வேண்டாம் என்று அன்று முடிவெடுத்தாராம். அதன் பின் தன்னிடம் வந்து கதை சொல்ல வரும் இயக்குநர்கள் வடிவேலு பற்றி பேச்சை எடுத்தால் அவர்களிடம் நோ சொல்லி திருப்பி அனுப்பி விடுவாராம் அஜித். ராஜா படத்தின் போது நடந்த இந்த பி ர ச் ச னையால் தான் அஜித்தும், வடிவேலும் கடந்த 20 ஆண்டுகளாக இணைந்து பணியாற்றவே இ ல் லையாம் என்று தகவல் க சி ந் துள்ளது.